ஆண் குழந்தை தான் வேணும் - கர்ப்பிணியை கொன்று கணவன் வெறிச்செயல்!
ஆண் குழந்தை மோகத்தில் கணவன், மனைவியை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
முதலில் பெண்
ஆந்திரா, நரசராவ் பேட்டையச் சேர்ந்தவர் வேணு(35). இவரது மனைவி சிவரஞ்சனி(25). இருவருக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. ஆனால், ஆண் குழந்தை மீது மோகம் கொண்ட கணவருக்கும், அவரது குடும்பத்திற்கும் பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை. எனவே அந்த குழந்தையிடம் வெறுப்பையே காட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் சிவரஞ்சனி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். ஆண் குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கணவர், வயிற்றில் உள்ள குழந்தையை ஆண் பெயர் வைத்தே அழைத்து வந்துள்ளார். மேலும் மருத்துவமனைக்கு செல்லும்போதெல்லாம் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என கேட்டு வந்துள்ளார்.
ஆண் குழந்தை மோகம்
ஆனால் அது சட்டப்படி குற்றம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து வேணு மருத்துவர்களிடம் வற்புறுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர் சிசுவை கொல்ல முடிவ்ய் செய்துள்ளார்.
இதற்கு அவரது குடும்பத்தாரும் உதவியாக இருந்துள்ளனர். அதன்படி, சில மூலிகைகளை அரைத்து சிசுவை கலைக்க கணவரும், மாமியாரும் சிவரஞ்சனிக்கு கொடுத்துள்ளனர். அதை குடிக்க மறுத்தவரை கட்டாயப்படுத்தி அவரது வாயில் ஊற்றியுள்ளனர். இதில் சிறிது நேரத்தில் மனைவி துடித்துள்ளார். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர் குடும்பத்தினர்.
இந்நிலையில் உடலில் விஷம் பரவி மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனையடுத்து புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரையும், மாமியாரையும் கைது செய்துள்ளனர். மேலும் சிசுவின் பாலினத்தை கூறிய மருத்துவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.