என் மூச்சிருக்கும் வரை நான்தான் தலைவர் - அழைப்பிதழிலேயே ராமதாஸுக்கு பதிலடி
அழைப்பிதழில் பாமக நிறுவனர் ராமதாஸ் படமில்லாதது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்தான் தலைவர்
திண்டிவனம் அடுத்த தைலாபுலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை அவருக்கு (அன்புமணி) கொடுக்கிறேன் என்று கூறியதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கடைசி வரை நான்தான் பதவியில் இருக்க வேண்டும் என்று 99 சதவீதம் பேர் கூறுகின்றனர்.
அன்புமணியின் செயல்
என் குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் சொல்லிய வார்த்தையை, என்னால் காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமியின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக 35 வயதில் அன்புமணியை நியமித்தேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உரிமை மீட்பு பயணம் செல்ல உள்ளதாக அன்புமணி அறிவித்தார். உரிமை மீட்பு பயணத்திற்கான அழைப்பிதழ் பாமக சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அழைப்பிதழில் அன்புமணி மட்டும் கருப்பு கண்ணாடியுடன் இருக்கிறார். ஆனால் ராமதாஸ் புகைப்படம் அதில் இல்லை. இதனால் பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
