Tuesday, Jun 17, 2025

சபதமெடுத்து ஒரு ஆண்டுக்குள் நடைபெற்ற பழிக்கு பழி கொலை - ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்!!

Bahujan Samaj Party Tamil nadu Chennai Murder
By Karthick a year ago
Report

தமிழகத்தை உலுக்கியுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்.

அதிர்ச்சி பின்னணி

இதற்கு பின்னணியில் மற்றுமொரு கொலை சம்பவம் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

Bahujan Samaj Amstrong

அவர் இறந்து ஒரு ஆண்டு ஆவதற்குள்ளாகவே, தற்போது ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். இதில், ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பிருப்பதாகவும், அதற்கு பழிக்கு பழியாகவே இக்கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்...கதறி அழுத பா.ரஞ்சித் - கொந்தளிக்கும் தலைவர்கள்!!

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்...கதறி அழுத பா.ரஞ்சித் - கொந்தளிக்கும் தலைவர்கள்!!

ஆம்ஸ்ட்ராங்

சென்னை பெரம்பூரில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. உணவு டெலிவரி உடையில் பயங்கர கத்தியுடன் வந்த 6 பேர் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முற்பட்ட 2 பேருக்கும் அறிவாள் வெட்டு விழுந்துள்ளது.

Bahujan Samaj Amstrong

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக கைதான 8 பேரில் ஆற்காடு சுரேஷின் தம்பியும் உள்ளார்.