அமமுக பொதுக்குழு கூட்டம் - டிடிவி தினகரன் திடீர் அறிவிப்பு!
சென்னை வானகரத்தில் வரும் 15ம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் வருகிற 15-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை , வானகரத்தில் நடைபெறுகிறது.
டிடிவி தினகரன்
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற
கழகத்தின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் : வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. pic.twitter.com/D13hC4Ehh6
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 4, 2022
15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.