இங்க மாப்பிள்ளைக்கு அவ்வளவு பஞ்சமா; 5 கோடி தராங்களாம் பெண் வீட்டார் - இதற்காகத்தான்..

Andhra Pradesh Marriage
By Sumathi Aug 14, 2023 07:55 AM GMT
Report

படித்த நல்ல வசதி உள்ள அமெரிக்க இந்திய மாப்பிள்ளைக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது.

வெளிநாட்டில் வேலை

ஹரி என்பவர் தனது ட்விட்டர் பதிவில் ஆந்திரா/ தெலுங்கானா மாணவர்களுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 50k+ சேர்க்கைகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வெறும் 5000 பிளஸ் தான் அமெரிக்க பல்கலையில் சேர்க்கைகள் உள்ளன.

இங்க மாப்பிள்ளைக்கு அவ்வளவு பஞ்சமா; 5 கோடி தராங்களாம் பெண் வீட்டார் - இதற்காகத்தான்.. | American Indian Grooms In Andhra High Demand

எப்படி அவ்வளவு ஈஸியாக அவர்கள் சீட் வாங்குகிறார்கள். ஏதாவது கல்வியாளர்கள் காரணமா? எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எஸ்கேபி கருணா என்பவர், "அமெரிக்காவில் இருக்கும் ஆந்திரா காலேஜ்மேட்டிடம் கேட்டேன்.

அதிக டிமாண்ட்

முக்கியமான காரணம் வரதட்சணை என்கிறான். படிப்புக்கு எவ்வளவு செலவு செய்தாலும் அதை இரு மடங்காக பெண் வீட்டில் இருந்து வாங்கி விடுவார்கள். ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளைக்கு 100 கோடி ரூபாய். அமெரிக்கா இன்ஜினியர் எனில் 5 கோடி கன்ஃபர்ம்டு. டாக்டர் பி.ஜி முடிச்சிருந்தா ஹாஸ்பிடல் கட்டி தரணும்.

இங்க மாப்பிள்ளைக்கு அவ்வளவு பஞ்சமா; 5 கோடி தராங்களாம் பெண் வீட்டார் - இதற்காகத்தான்.. | American Indian Grooms In Andhra High Demand

நம்ம ஊரில் லோன் வாங்கிதான் படிச்சாகணும். அதிகபட்சம் நகை & கல்யாண செலவு தவிர மற்ற ஏதும் அம்மஞ்சலிக்கு தேறாது. அதிலும் மேற்கு மாவட்டங்களில் கல்யாண பொண்ணுக்கு மாப்பிள்ளை சொத்து எழுதி தரும்படி ஆகிறதாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு விஜய் என்பவர், உண்மைதான். படிப்பில் மக்காக இருப்பவர் கூட அமெரிக்காவில் போய் படிக்கிறார். அங்கு படித்து எதாவது ஒரு வேளையில் சேர்ந்து திருமணத்தில் வசூலித்துவிடுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, தஞ்சை சாண்டி என்பவர், ஆந்திராவில் உண்மையாகவே பொண்ணு கிடைகிறதுல்ல நிறைய பேறு பொண்ணோட வீட்டுக்கு பணம் கொடுத்து கல்யாணம் பண்றாங்க எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவும், பதிலும் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.