சிகாகோவில் புடவை அணிந்து மாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நண்பர்கள்...! - நெகிழ்ச்சி வீடியோ வைரல்
2 ஆண்கள் சேலை உடுத்திக்கொண்டு இந்திய நண்பரின் திருமணத்திற்கு மாஸாக நடந்து வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
இன்ப அதிர்ச்சி கொடுத்த நண்பர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிகாகோவில் தன்னுடைய இந்திய மணமகன் திருமணத்திற்கு அவருடைய 2 ஆண் நண்பர்கள் மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டனர்.
இதனையடுத்து, மணமகனுக்கு தெரியாமல் நண்பர்கள் இரண்டு பேரும் ஒரு பெண் உதவியுடன் சேலை உடுத்திக்கொண்டு, பொட்டு வைத்து, வளையல்கள் போட்டு சிகாகோ சாலையில் மாஸாக நடந்து வந்தனர்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத மணமகன் இவர்கள் இருவரும் நடந்து வருவதைப் பார்த்து வெட்கத்தில் வெடித்துச் சிரித்தார். பிறகு நண்பர்களை அணைத்துக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் மூவரும் கை கோர்த்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வாவ்... நண்பனுக்காக இவர்கள் செய்த செயல் உண்மையில் மிகவும் பெருமையாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.