தாடி வளர்க்கத் தடை... சீக்கியரின் பாரம்பரியத்திற்கு அனுமதி மறுப்பு!
திருமணத்திற்காக தாடி வளர்த்த சீக்கியாருக்கு அந்நாட்டு அரசு அனுமதியை மறுத்துள்ளது.
தாடிக்கு தடை
அமெரிக்காவில் போலீசாரும், ராணுவத்தினர் போலவே இருக்கும்படி அந்நாட்டில் சட்டங்கள் இருந்தன. இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், நாளடைவில் இந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டன.
தற்பொழுது நியூயார்க்கில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் சரண்ஜோத் டிவானா என்ற சீக்கியர், தனது திருமணத்துக்காக தன் தாடியை அரை அங்குலம் அதிகம் வளர்க்க விரும்பினார். சீக்கிய மத கோட்பாடுகளின்படி, ஆண்கள் கட்டாயம் தலைப்பாகை அணிய வேண்டும். தங்கள் தலைமுடியையும், தாடியையும் அவர்கள் எடுக்கக்கூடாது. ஆனால், பாதுகாப்பு கருதி அவருக்கு தாடி வளர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சங்க தலைவர்
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை, தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் கூறுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் அது மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நியூயார்க் நகர போலீசார் நலச் சங்கத் தலைவர் சார்லி மர்பி கூறுகையில், ''காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து நியூயார்க்வாசிகளும் தங்கள் மத சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். ஆனால், நியூயார்க் காவல் துறையில் உள்ள ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.