இளம் மகனின் இரத்தத்தை தனக்கு செலுத்திக் கொண்ட தொழிலதிபர்; தினமும் 100 மாத்திரை - பகீர் காரணம்!
தொழிலதிபர் ஒருவர் மகனின் இரத்தத்தை தானே செலுத்திக் கொண்டுள்ளார்.
சாகா வரம்?
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரையன் ஜான்சன். இவர் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் ரூபாயை செலவிடுகிறார். ஆண்டுக்கு 16 கோடி. இவரது வயது 45.
ஆனால், உடல் உறுப்புகள் தோலின் ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டால் வயது 28 என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவரின் நுரையீரல் 18 வயதைப் போலவும், இதயத்தின் வயதோ 37 போன்று ஆரோக்கியமாக இருக்கிறதாம்.
போராடும் தொழிலதிபர்
இதனைத் தொடர்ந்து, என்றும் 18 வயதாக இளைஞனாக இருக்க வேண்டும் என்று முற்படுகிறார். காலை 5 மணிக்கு எழுந்து, காலை உணவை 6 மணிக்கு எடுத்துக்கொள்கிறார். உணவில் அசைவ உணவைத் தவிர்த்து விட்டு, முற்றிலும் காய்கறி பழங்களை மட்டுமே உட்கொள்கிறார்.
இந்நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், 21ம் நூற்றாண்டில் நான் இறக்க விரும்பவில்லை என்பதே எனது முக்கிய குறிக்கோள். இந்த காரணத்திற்காக, எனது 17 வயது மகனின் பிளாஸ்மா ஊசியை செலுத்திக்கொண்டேன்.
கடந்த 6 மாதங்களில் எனது தூக்கத்தின் தரம் 100% ஆக இருக்கிறது. உணவுக்காக ஒரு நாளைக்கு 2250 கலோரிகளை எடுத்துக்கொள்கிறேன், அது முற்றிலும் சைவ உணவு. இரவு 8.30 மணிக்குப் பிறகு உடலுறவு கொள்வதில்லை. நான் தனியாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.