வரலாறு காணாத வறட்சி; இறந்த நூற்றுக்கணக்கு டால்பின்கள் - உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!
அமேசான் ஆற்றுப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
வறட்சி
உயிர்நாடியாக கருதப்படும் அமேசான் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியடைந்துள்ளது. நீர்மட்டம் குறைந்ததன் விளைவாக அதன் கிளை நதிகளிலும் தண்ணீர் கடுமையாக குறைந்துள்ளது.
இதனால், கடந்த சில நாட்களில் 100க்கும் அதிகமான டால்பின்கள் வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, மனாஸில் கடந்த ஆண்டு இதே சமயம் நீர்மட்டத்தின் அளவு 17.60 மீட்டராக இருந்தது.

வறட்சியினால் வெளிவந்த 3200 ஆண்டுகள் பழமையான நகரம்; நதிக்கு அடியில் மூழ்கியிருந்த அதிசயம் - எங்கு தெரியுமா?
எச்சரிக்கை
இது தற்போது 13.59 ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதது பருவநிலை மாற்ற பிரச்னைகளே காரணம் என்று கூறப்படுகிறது.
நீர்மட்டம் குறைந்ததால், மாசடைந்த குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, காய்ச்சல் உள்ளிட்டவை அடிக்கடி ஏற்படுவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் உலக நாடுகள் பாதிப்பை சந்திக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.