1700 ஊழியர்கள் பணிநீக்கம்.. அமேசான் நிறுவனம் எடுத்த முடிவு - திணறும் கனடா மக்கள்!
அமேசான் நிறுவனத்திலிருந்து 1700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமேசான்
உலகின் முன்னணி நிறுவனமாக அமேசான் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. வட அமெரிக்க நாடான கனடா, தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த வகையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசானுக்கு சொந்தமாக நிறைய நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இங்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி 7 அலுவலகங்களை அமேசான் மூடுவதாக அறிவித்துள்ளது .இதன் காரணமாக அங்கு பணியாற்றி வந்த 1700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு Laval அமைப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தின் தலைவரான Caroline Senneville, இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,’’ இந்தச் செயல் ஊழியர்களின் முகத்தில் அறைந்தது போன்று உள்ளது. அமேசான் நிறுவனம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது உரிமைக்காகத் துணை நிற்க நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது.
பணிநீக்கம்
சட்டரீதியாக இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.பணிநீக்க ஊழியர்கள் எண்ணிக்கை 2,000க்கும் மேல் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது குறிப்பிடத்தக்கது.