வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு : ஒப்புதல் அளித்த ஆளுநர்

india politics bjp aiadmk
By Jon Mar 02, 2021 03:18 PM GMT
Report

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி. அந்த வகையில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது, பாமகவினர் மத்தியில் பேரின்பத்தை உண்டாக்கியது.

பாமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து முதல்வரிடம் நன்றி தெரிவித்தனர். உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மறுநாளே அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு பாமகவுக்கு 23 தொகுதிகளும் கொடுத்தாகிவிட்டது.

இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருக்கிறார். உள் ஒதுக்கீட்டை அறிவிக்கும் போதே, இந்த ஒதுக்கீடு தற்காலிகமானது தான் என்றும் 6 மாதத்திற்கு பிறகு உள் ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.