இடி, உரசல்; பேருந்தில் பெண்களின் துயரங்கள் - அரசு புதிய அதிரடி!
பேருந்தில் ஆண்கள் உரசினால், பெண்கள் அவசர பட்டனை அழுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பேருந்தில் புதிய வசதி
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1200 பேருந்துகளில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேருந்துகளில் பயணம் செய்யும்
ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பட்டனை அழுத்தலாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, பொது இடங்களிலும்,
பேருந்துகளிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து 2 நாட்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.