அனுமதி மறுத்த அரசு; சுவர் ஏறி குதித்த முன்னாள் முதல்வர் - என்ன நடந்தது?

Uttar Pradesh
By Sumathi Oct 12, 2023 06:25 AM GMT
Report

அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி மறுப்பு

உத்தர பிரதேசம், லக்னோவில் ஜேபிஎன்ஐசி மையம் உள்ளது. இங்கு சோசலிஸ்ட் தலைவர் ஜேபி நாராயணனின் சிலை உள்ளது. இந்நிலையில், ஜேபி நாராயணனின் சிலைக்கு அகிலேஷ் யாதவ் மாலை அணிவிக்க சென்றார்.

அனுமதி மறுத்த அரசு; சுவர் ஏறி குதித்த முன்னாள் முதல்வர் - என்ன நடந்தது? | Akhilesh Yadav Climbs Boundary Wall Lucknow Video

அப்போது, பராமரிப்பு பணி நடப்பதாக கூறி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அகிலேஷ் யாதவ் அந்த மையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டைகளால் ஆன சுவர் போன்ற அமைப்பை ஏறி குதித்து உள்ளே சென்று ஜேபி நாராயணனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Akhilesh Yadav History in Tamil; இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவி - சட்ட ஒழுங்கில் திண்டாடிய அகிலேஷ் யாதவ்!

Akhilesh Yadav History in Tamil; இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவி - சட்ட ஒழுங்கில் திண்டாடிய அகிலேஷ் யாதவ்!

பரபரப்பு வீடியோ

இதுதொடர்பான போட்டோ, வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து, இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜேபி நாராயணன் சிறந்த சோசலிச சிந்தனையாளர். அவர் சமூக நீதிக்காக பாடுபட்ட வக்கீல் ஆவார்.

அவரது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுக்க கேட் போட்டு பாஜகவினர் அலைக்கழிக்கின்றனர். அவருக்கு மரியாதை செலுத்துவதை தடுக்கவே பாஜகவினர் இதனை செய்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.