ஐஸ்வர்யா ராய் 48 வயதில் மீண்டும் கர்ப்பம்? தீயாய் பரவும் புகைப்படம்!
நடிகை ஐஸ்வர்யா ராய் 2வது முறையாக கர்ப்பம் அடைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.
ஐஸ்வர்யா ராய்
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடந்த 2007 ஆம் ஆண்டு, முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் பிறந்தார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளியன்று திரைக்கு வரவுள்ளது.
கர்ப்பம்?
இதையொட்டி படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மும்பை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார்.
ஐதராபாத் செல்வதற்காக ஐஸ்வர்யா ராய் மும்பை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இதனைப் பார்த்தவர்கள் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாக கமென்ட் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராயை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.