கொரோனாவிலிருந்து தப்பிக்க கணவர் போட்ட திட்டம்! முழு விமானத்தையும் முன்பதிவு செய்தார்

airpalne-ticket-corna-virus
By Jon Jan 10, 2021 02:45 PM GMT
Report

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க கோடீஸ்வரர் ஒருவர் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகர்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலி நகரத்துக்கு தன் மனைவியுடன் செல்ல திட்டமிட்டார்.

ஆனால் பிற பயணிகளுடன் பயணித்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளார்.

இதற்காக அவர் ரூ. 6 லட்சம் இந்தோனேசியப் பணம் செலவழித்திருக்கலாம் என கூறப்படுகிறது. தான் தனது மனைவியுடன் அந்த விமானத்தில் பயணித்தது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர், கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக எனது மனைவியுடன் செல்ல முழு விமானத்தையும் முன்பதிவு செய்ததோம், தங்களை தவிர வேறு யாரும் அந்த விமானத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

இந்த விமானத்தை முன்பதிவு செய்தபோது பிரைவேட் ஜெட்டை விட மலிவானது என்பதை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.