நாங்க பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பதா? கொந்தளித்த ஈபிஎஸ்!

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Sumathi Sep 29, 2022 10:56 AM GMT
Report

நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது என ஈபிஎஸ் திமுகவை சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

சிவகாசி, திருத்தங்கலில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம்.

நாங்க பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பதா? கொந்தளித்த ஈபிஎஸ்! | Aiadmk Owns The Dravidian Model Eps

ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக.,வினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கின்றனர்.

திராவிட மாடல்

நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார். திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான்.

நாங்க பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பதா? கொந்தளித்த ஈபிஎஸ்! | Aiadmk Owns The Dravidian Model Eps

திராவிட மாடல் என சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார்? உயர்கல்வி அமைச்சர், பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாக கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை கொச்சைப்படுத்துகிறார்.இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் கொடுப்பார்கள்.

2 போனஸ் 

மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிமுகவில் தான் தொண்டர்கள் தலைவராகலாம். ஓட்டு போட்ட மக்களுக்கு ஸ்டாலின் 2 போனஸ் வழங்கியுள்ளார். மின்கட்டண உயர்வு , சொத்து வரி உயர்வு.

கரெண்ட தொட்டால்தான் ஷாக் அடிக்கும் தற்போது கேட்டாலே சாக் அடிக்குது. படித்தவர்கள், படிக்காதவர்களை ஏமாற்றிய அரசு திமுக அரசு. ஒரு திட்டத்தை அறிவிக்க 38 குழுவை போடுகிறார் ஸ்டாலின். திமுக அரசு அறிவித்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றார்.