அதிமுக அலுவலகம் சீல் : ஓபிஎஸ் ஈபிஎஸ் வழக்கை ஒத்தி வைத்த நீதி மன்றம்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jul 15, 2022 12:40 PM GMT
Report

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பினை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

அதிமுக அலுவலகம் சீல் : ஓபிஎஸ் ஈபிஎஸ் வழக்கை ஒத்தி வைத்த நீதி மன்றம் | Aiadmk Office Sealed Adjournment Of Judgment

வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் என கூறி அவற்றையும் தாக்கல் செய்தது காவல்துறை. இதனால் காவல்துறை பதில் மனுவுக்கு ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒத்தி வைத்த நீதி மன்றம்

அலுவகலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என காவல்துறை நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தது.

இதனைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.