ஐபிஎல் 2025 கோப்பையை 'இந்த' அணி தான் வெல்லும் - Grok, Gemini, ChatGPT ஒரே கணிப்பு
ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லும் அணி குறித்து AI தளங்கள் கணித்துள்ளன.
கோப்பை யாருக்கு?
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் இந்த 2 அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை.
எனவே, முதல் கோப்பையை கையில் ஏந்தும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. இந்நிலையில், க்ரோக் (Grok), ஜெமினி (Gemini), மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) ஆகிய AI தளங்கள் ஆர்சிபி அணி 2025 கோப்பையை வெல்லும் என கணித்துள்ளன.
க்ரோக் (Grok)
குவாலிஃபையர் 1 இல் PBKS அணியை 101 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, 60 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கைத் துரத்தி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. ஜோஷ் ஹேசில்வுட் (11 போட்டிகளில் 21 விக்கெட்டுகள்) மற்றும் சுயாஷ் சர்மா தலைமையிலான ஆர்சிபி அணியின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது.
விராட் கோலி (55.81 சராசரியில் 614 ரன்கள்) மற்றும் பில் சால்ட்டின் அதிரடியான ஃபார்ம் ஆகியோரின் பேட்டிங் சிறந்த நிலையில் உள்ளது. எனவே, RCB முன்னிலை பெறுகிறது.
ஜெமினி (Gemini)
இந்த சீசனில் சமீபத்திய போட்டிகள் மற்றும் அவர்களின் தகுதிச் சுற்று செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு RCB சற்று முன்னிலை பெற்றிருக்கலாம்.
சாட்ஜிபிடி (ChatGPT)
குவாலிஃபையர் 1ல் பெற்ற தீர்க்கமான வெற்றி உட்பட, RCB அணி தொடர்ச்சியான ஃபார்மையும், இறுதிப் போட்டியில் வெல்ல ஆர்சிபி தான் விருப்பமான அணியாக கருதப்படுகிறது.