18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையை படைத்த RCB
ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையை RCB படைத்துள்ளது.
RCB vs LSG
2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டத்தால், 227 ரன்கள் குவித்து, பெங்களூரு அணிக்கு 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
அடுத்தாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஜிதேஷ் சர்மா மற்றும் கோலியின் அதிரடி ஆட்டத்தால், 18.4 ஓவர்கள் முடிவில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய RCB அணி, Qualifier 1 இல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
RCB படைத்த சாதனை
இந்த வெற்றி மூலம், 18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையை RCB அணி படைத்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில், பெங்களூரு சின்னசாமி மைதானம் தவிர்த்து, வெளியூர்களில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் RCB அணி வெற்றி பெற்றுள்ளது.
Finding 𝙖-𝙬𝙖𝙮 from home 🫡#RCB make history with their epic victory in Lucknow ❤#TATAIPL | #LSGvRCB | @RCBTweets pic.twitter.com/xS7WuuMqLM
— IndianPremierLeague (@IPL) May 27, 2025
ஒரு ஐபிஎல் தொடரில், வெளியூர்களில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை RCB வென்றுள்ளது.