இதனால்தான் விமானம் வெடித்தது - என்ஜின் சுவிட்ச் அணைக்கப்பட்டதா?
என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
விமான விபத்து
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "விமானம் 08:08:42 UTC மணியளவில் மணிக்கு 180 நாட்ஸ் IAS என்ற அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகத்தை அடைந்தது.
உடனடியாக, எஞ்சின் 1 மற்றும் எஞ்சின் 2 எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் ஒரு வினாடி இடைவெளியில் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு மாறின. என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், எஞ்சின் N1 மற்றும் N2 அவற்றின் டேக்-ஆஃப் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின.
அறிக்கை தகவல்
காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் ஏன் கட்ஆஃப் செய்தார் என்று கேட்கிறார். அதற்கு மற்றொரு விமானி தான் அதைச் செய்யவில்லை என்று பதிலளித்தார். விமான நிலையத்திலிருந்து பெறப்பட்ட CCTV காட்சிகளில், விமானம் புறப்பட்ட உடனேயே (ஆரம்பக்கட்ட டேக் ஆஃப் போது) ராம் ஏர் டர்பைன் (RAT) விரிவடைந்தது தெரியவந்துள்ளது.
The preliminary #AAIBreport on the #AirIndiaAI171 crash revealed a chilling cockpit exchange: "Why did you cut off fuel?" as both engines' fuel switches inexplicably moved to 'Cutoff' before the fatal crash.#AhmedabadPlaneCrash
— Nomadic Nitin (@Niitz1) July 12, 2025
READ FULL REPORT HERE: https://t.co/5JOJvw0qNi
விமானத்தின் பாதைக்கு அருகில் குறிப்பிடத்தக்க பறவைகளின் நடமாட்டம் எதுவும் காணப்படவில்லை. விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரைக் கடக்கும் முன்பே உயரத்தை இழக்கத் தொடங்கியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களின் ஆழமான பகுப்பாய்வைத் தொடர்ந்து இறுதி AAIB அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.