சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது நடைபெறுகிறது? வெளியான தேதி!
விரைவில் ஃபார்முலா -4 கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4
தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தயத்தை சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த கார் பந்தயமானது கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால் இந்த கார் பந்தயத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை மாநகருக்குள் கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல், தனியார் நிறுவனம் இந்த பந்தயத்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது விளக்கமளித்த தமிழக அரசு, “மழை, வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த பார்முலா 4 கார் பந்தயத்தை ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியான தேதி
மேலும், இந்த பந்தயத்துக்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கார்கள் கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும்.
இதற்கு மருத்துவமனை தரப்பிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கார் பந்தயத்தை நடத்துவதற்கான தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சென்னையில் மழை தீவிரம் அடையும் முன்பாகவே வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் அண்ணா சாலையில் இரவு நேரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
