மணிப்பூரில் மீண்டும் பூதாகரமாக வெடித்த கலவரம், பள்ளிக்கு தீ வைப்பு - பதறும் அரசு!
பள்ளிக்கு தீ வைத்து மீண்டும் கலவர பூமியாக மாற்றியுள்ளனர்.
கலவரம்
மணிப்பூரில் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர். அவர்கள் 2 பெண்களை ஆடையின்றி இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது நாட்டையே உலுக்கிய சம்பவமாக பார்க்கப்பட்டது.
தீ விபத்து
இந்நிலையில், மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு புதிய வன்முறை வெடித்தது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, டோர்பங் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் சற்றும் ஆறாத இந்த சூழலில் மீண்டும் தொடர்ந்து கலவரம் வெடித்து வருகிறது. அந்நாட்டு முதலமைச்சர் பிரேன் சிங், வடகிழக்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்துவதற்காக போராடி வருகிறார்.