கணவர் இறந்து 4 நாட்கள்.. 2 வயது குழந்தையுடன் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

Madurai Death
By Vinothini Oct 04, 2023 11:47 AM GMT
Report

பெண் ஒருவர் தனது கணவர் இருந்து 4 நாட்களில் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியில் மித்தல் நகரை சேர்ந்தவர் விவேக் 30 வயதான இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி 25 வயதான இவர் பி.காம் பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணகி தற்பொழுது 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

after-husbands-death-wife-suicided-with-her-baby

ஷாலினி 2-வது முறையாக கர்ப்பமாகி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சில மாதங்களாக விவேக் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இவர் 4 நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டோல்கேட்டில் நிகழ்ந்த கொடூரம்.. தடுத்து நிறுத்திய ஊழியரை ஏற்றி கொன்ற கண்டெய்னர் லாரி - அதிர்ச்சி!

டோல்கேட்டில் நிகழ்ந்த கொடூரம்.. தடுத்து நிறுத்திய ஊழியரை ஏற்றி கொன்ற கண்டெய்னர் லாரி - அதிர்ச்சி!

அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில், சோகத்தில் இருந்த ஷாலினி நேற்று காலை தனது 2 வயது மகளுடன் சேர்ந்து வீட்டின் அருகில் இருந்த கிணற்றின் பக்கம் சென்றார். அவர் குழந்தையை தனது முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தார். இதில் நீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர், கிணற்றுக்குள் இறங்கி ஷாலினி உடலை மீட்டனர்.

after-husbands-death-wife-suicided-with-her-baby

குழந்தை உடலை நீண்டநேரம் தேடியும் கிடைக்காததால் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் மருமகளும், பேரக்குழந்தையும் உயிரிழந்ததை கேள்விப்பட்டதும், ரவிச்சந்திரன் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.