மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் - இரவில் காதலனுடன் இளம்பெண்..ஷாக் சம்பவம்!

Tamil nadu Chennai Tamil Nadu Police Marriage
By Swetha Jun 20, 2024 06:30 AM GMT
Report

நிச்சயதார்த்தம் முடிந்த கையுடன் இளம்பெண் ஒருவர் தனது காதலனை இரவு வீட்டுக்கு அழைத்துள்ளார்.

 நிச்சயதார்த்தம் 

சென்னை, கே.கே நகரில் வசித்து வருபவர் இந்த இளம்பெண். கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரை நீண்ட நாளாக காதலித்து வந்தார். இந்த காதலை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் - இரவில் காதலனுடன் இளம்பெண்..ஷாக் சம்பவம்! | After Engaged Girl Called Her Lover And Married

இதனால் அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளையுடன் அவரது வீட்டிலேயே நிச்சயதார்த்த விழா நடந்தது. அப்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத அந்த பெண், னக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் மாலையும் மாற்றிக்கொண்டார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நேரத்தில் தான் ஒரு பூகம்பம் வெடித்தது.

நிச்சயதார்த்ததில் சந்தோஷமாக கலந்துகொண்ட பெண், தனது காதலனுடன் செல்போனில் பேசி அவரை இரவில் தனது வீட்டிற்கு வரவழைத்தார். காதலனும் தனது நண்பர்கள் 5 பேருடன் வந்தார். 'எனக்கு இவர் தான் கணவன். நான் அவரோடு தான் போகப்போகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப்பாருங்கள்' என்று அந்த மாணவி கூறியுள்ளார்.

முன்னாள் காதலியை காட்டிற்குள் அழைத்து கொன்று கிணற்றில் வீசிய காதலன் - கொடூர சம்பவம்!

முன்னாள் காதலியை காட்டிற்குள் அழைத்து கொன்று கிணற்றில் வீசிய காதலன் - கொடூர சம்பவம்!

காதலுடன்..

தனது காதலனுடன் வெளியேறிய அவரை குடும்பத்தினர் தடுக்க முயன்றதால். பெரும் களேபரம் ஆனது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார்.

மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் - இரவில் காதலனுடன் இளம்பெண்..ஷாக் சம்பவம்! | After Engaged Girl Called Her Lover And Married

இந்த நிலையில், தனது காதலை மனமுடைந்த அந்த பெண் தனக்கு 21 வயது ஆகிவிட்டதால் சட்டப்படி நான் செய்துகொண்ட திருமணத்தை ஏற்றுக்கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள் என்று கூறி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

இதன் பிறகு, மாணவியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடமும் சமாதானம் பேசி, குடும்பத்தாரும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்