கேரளாவில் தீவிரமடையும் பன்றிக்காய்ச்சல் : பன்றிகளை கொல்ல உத்தரவு!

Kerala Virus Africa
By Sumathi Aug 02, 2022 12:29 PM GMT
Report

கேரளாவில் ஏற்கனவே தக்காளி காய்ச்சல், குரங்கம்மை போன்ற நோய் தொற்றுகள் இருந்து வரும் நிலையில் தற்போது புது வரத்தாக பன்றிக்காய்ச்சல் இடம்பெற்றுள்ளது.

கேரளா

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் "ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்" என்னும் நோய் பரவியுள்ளது. மேலும் நோய் தொற்று பரவாமல் தடுக்க 250 க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல கேரளா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் தீவிரமடையும் பன்றிக்காய்ச்சல் : பன்றிகளை கொல்ல  உத்தரவு! | African Swine Flu In Kerala Order To Kill Pigs

கண்ணுரின் கனிச்சார் பஞ்சாயத்தில் இரண்டு பன்றி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் உள்ள 237 பன்றிகளை கொல்ல அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் ஒரு பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மையம் செயல்பட்டு வருகிறது.

பன்றிக்காய்ச்சல்

மேலும் இந்த இரு பண்ணைகளை தவிர்த்து சுமார் 10 கிலோமீட்டர் சுற்றியுள்ள பன்றி பண்ணைகள் அனைத்தும் தற்போது கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று பதிவாகியதை தொடர்ந்து தற்போது 300 கும் மேற்பட்ட பன்றிகள் கொல்ல பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் தீவிரமடையும் பன்றிக்காய்ச்சல் : பன்றிகளை கொல்ல  உத்தரவு! | African Swine Flu In Kerala Order To Kill Pigs

வயநாடு மற்றும் கண்ணூரில் ஒரு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தன அலுவலகத்தில் ஒரு கூட்டத்தையும் நடத்தினர். அதில் நோய் தடுப்பு குழுவை அமைக்க கோரியும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பன்றிகளை கொல்ல முடிவு

நோய் தடுக்கும் செயல்பாட்டில் ஒன்றாக, இந்த மாதம் ஆகஸ்ட் 1 முதல் 30 ந் தேதி வரை கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு பன்றிகள் அல்லது அதன் இறைச்சிகள் ஏற்றுமதி- இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் பரவலை தடுக்க சுல்தான் பத்தேரியின் நெனேமணி கிராமத்தில் உள்ள பண்ணைகளில் சுமார் 193 பன்றிகளை கொல்ல முடிவு செய்துள்ளதாக கால் நடை பராமரிப்பு துறையின் இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.