ரத்தத்தில் வைத்த கை நாட்டுடன் எடப்பாடியாருக்கு சென்ற கடிதம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் செயல்

ADMK Edappadi K. Palaniswami Ramanathapuram
By Karthikraja Oct 22, 2024 05:30 PM GMT
Report

எடப்பாடி பழனிசாமிக்கு ரத்தத்தால் கை நாட்டு வைத்த கடிதத்தை அதிமுகவினர் அனுப்பியுள்ளனர்.

பசும்பொன் குருபூஜை

வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 62வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. 

தேவர் குருபூஜை

தமிழக அரசின் சார்பில் நடைபெறும் விழா என்பதால் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள். 

பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி - முக்கிய பதவி கொடுத்த எடப்பாடியார்

பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி - முக்கிய பதவி கொடுத்த எடப்பாடியார்

ரத்தத்தில் கைநாட்டு

மேலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில், தென்மண்டல ஐஜி பிரேம்ஆனந்த் சின்ஹா, ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 

தேவர் குருபூஜை

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 29 ஆம் தேதி மதுரை வர உள்ளார். மதுரைக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளிக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். 

udhayakumar blood

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் பசும்பொன் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள விடுத்துள்ள அழைப்பு கடிதத்தில் ரத்தத்தால் கை நாட்டு வைத்து அனுப்பியுள்ளனர்.