மக்களவை தேர்தல்; அதிமுக தோல்வி - அரிவாளால் காலை வெட்டிய தொண்டர்!

ADMK Thoothukudi Lok Sabha Election 2024
By Swetha Jun 07, 2024 05:20 AM GMT
Report

அதிமுக தோல்வியால் தொண்டர் தன் காலை துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக  தோல்வி 

தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(75). தொழிலாளியான இவர் 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். நடப்பாண்டின் மக்களவை தேர்தலில், அதிமுக 30 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து பேசினார்.

மக்களவை தேர்தல்; அதிமுக தோல்வி - அரிவாளால் காலை வெட்டிய தொண்டர்! | Admk Losses Volunteer Cuts His Own Leg

அப்போது, அங்கு இருந்த ஒருவர் அ.தி.மு.க.வுக்கு ஒரு இடத்தில் கூட வெல்லாது எனவும் திமுக தான் வெற்றி பெரும் எனவும் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் கருமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் பந்தயம் கட்டினார்கள்.

அண்ணாமலை ஜெயிக்கணும் - விரலையே வெட்டிக்கொண்ட தொண்டர்

அண்ணாமலை ஜெயிக்கணும் - விரலையே வெட்டிக்கொண்ட தொண்டர்

வெட்டிய தொண்டர்

அதில், செல்வக்குமார், "அ.தி.மு.க. தோற்றுவிட்டால் எனது காலை வெட்டுகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோற்றது.

மக்களவை தேர்தல்; அதிமுக தோல்வி - அரிவாளால் காலை வெட்டிய தொண்டர்! | Admk Losses Volunteer Cuts His Own Leg

இதனால் செல்வக்குமார் நேற்று முன்தினம் அரிவாளால் தனது வலது காலில் கரண்டைக்கு கீழே லேசாக வெட்டினார். இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.