ஏதாவது சொன்னாலே கைதா? சாட்டை துரைமுருகன் கைது..கொதிக்கும் எடப்பாடியார்!!

Naam tamilar kachchi ADMK Seeman Edappadi K. Palaniswami
By Karthick Jul 11, 2024 04:59 PM GMT
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

ஏதாவது சொன்னாலே கைதா? சாட்டை துரைமுருகன் கைது..கொதிக்கும் எடப்பாடியார்!! | Admk Eps Slams Sattai Duraimurugan Arrest

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூகவலைத்தளப்பக்க பதிவை வெளியிட்டுள்ளார்.

சைபர் கிரைம் போலீசார் அதிரடி - குற்றாலத்தில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்!! அதிர்ச்சி பின்னணி

சைபர் கிரைம் போலீசார் அதிரடி - குற்றாலத்தில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்!! அதிர்ச்சி பின்னணி

அப்பதிவில்,   

கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

ஏதாவது சொன்னாலே கைதா? சாட்டை துரைமுருகன் கைது..கொதிக்கும் எடப்பாடியார்!! | Admk Eps Slams Sattai Duraimurugan Arrest

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்..... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் அவர்களை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.