அந்த திட்டம் எங்கே ஸ்டாலின்.. நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா? ஈபிஎஸ் கேள்வி!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath May 26, 2024 02:00 PM GMT
Report

லேப்டாப் வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது .

அந்த திட்டம் எங்கே ஸ்டாலின்.. நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா? ஈபிஎஸ் கேள்வி! | Admk Edappadi Palaniswami Slams Dmk Govt

இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

இதனை பீகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் - ராமதாஸ் அறிவுரை!

இதனை பீகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் - ராமதாஸ் அறிவுரை!

எங்கே ஸ்டாலின்?

திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா?

அந்த திட்டம் எங்கே ஸ்டாலின்.. நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா? ஈபிஎஸ் கேள்வி! | Admk Edappadi Palaniswami Slams Dmk Govt

அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா? #லேப்டாப்_எங்கே_ஸ்டாலின்" என்று குறிப்பிட்டுள்ளார்.