விடியா திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் - எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!

ADMK DMK Edappadi K. Palaniswami
By Vinothini Oct 02, 2023 05:04 AM GMT
Report

எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் -5ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பொதுப் பணிகளை சரிசெய்யத் தவறிய விடியா திமுக அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து,

admk-announced-protest-against-dmk

இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெரு-ஏரிக்கரை தெரு சந்திப்பில், 5.10.2023 ( வியாழக்கிழமை) அன்று கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்".

எதற்கு பிளாக் பண்ணீங்க?.. என்னை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை - சீமானை எதிர்க்கும் வெற்றிக்குமரன்!

எதற்கு பிளாக் பண்ணீங்க?.. என்னை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை - சீமானை எதிர்க்கும் வெற்றிக்குமரன்!

பழனிச்சாமி அறிவிப்பு

இதனை தொடர்ந்து, "இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ளவும்.

விடியா திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.