தமிழகத்தில் மின்கட்டண உயர்வு - அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Edappadi K. Palaniswami
By Nandhini Jul 19, 2022 12:51 PM GMT
Report

மின்கட்டணம் உயர்வு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என பதிவிட்டுள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கண்டித்து வரும் ஜூலை 25ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

edappadi-palanisamy