40 நாய்களை சாகும் வரை பாலியல் வன்கொடுமை; சிக்கிய பிரபலம் - அதிர்ந்த நீதிமன்றம்!
நாய்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆடம் பிரிட்டன். பிரபல சேனல்களின் தயாரிப்புகளில் விலங்கியல் நிபுணராக பணியாற்றியவர். வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக கல்விப் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
முதலைகளை தேர்ச்சியாக கையாள்வதால் ’முதலை மனிதர்’ எனவும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், விலங்குகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். குறிப்பாக, நாய்களை துன்புறுத்து அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்.
பகீர் பின்னணி
இதுவரை, 56 விலங்குகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதற்காக, டார்ச்சர் ரூம் என ஒன்றையும் வடிவமைத்துள்ளார்.
மேலும், இவரை போலவே நாய்கள் மீது யாருக்கெல்லால் ஈடுபாடு இருக்கிறது என அவர்களை கண்டறிந்து டெலகிராம் மூலம் க்ரூப் ஒன்றை உருவாக்கி உள்ளார். தொடர்ந்து, நீண்ட தொலைவுக்கு வீடு மாறுபவர்கள் அல்லது வேறு எங்காவது டிரான்ஸ்பர் ஆகி செல்பவர்கள் இருக்கிறீர்களா?
அப்படி நீங்கள் குடியேறி சென்றால், நீங்கள் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அதனால், என்னிடம் விட்டு செல்லுங்கள், தனியாக பராமரிப்பு மையத்தை நான் செயல்படுத்துகிறேன் என விளம்பரப்படுத்தியுள்ளார். நாய்களின் பழைய போட்டோக்களை ஓனர்களுக்கு அனுப்பி ஏமாற்றியும் வந்துள்ளார்.
இதில், பெண் ஒருவருக்கு அவர் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் புகாரளித்துள்ளார். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலத்தையும் அளித்துள்ளார்.