50 வயசிலும் திருமணம் பண்ணல - அவரோட ரொம்ப பாசமா இருந்தேன்..அவருக்கு அப்புறம்!! சித்தாரா

Sithara
By Karthick May 12, 2024 05:38 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சித்தாரா.

புதுவசந்தம்

சித்தாரா விக்ரமன் இயக்கத்தில் முரளி, ஆனந்த் பாபு ஆகியோர் நடித்து வெளியான படம் புது வசந்தம். சிறிய ஸ்டார்கள் கொண்டு பெரும் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது.

actress sithara why havent marriead still heroine

அப்படத்தின் மூலம் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தவர் நடிகை சித்தாரா. இவர் கே.பாலச்சந்தரின் புது புது அர்த்தங்கள் படத்தில் அறிமுகமாகினார். தொடர்ந்து புரியாத புதிர், அர்ச்சனா IAS போன்ற படங்களில் நடித்த சித்தாரா கன்னடத்தில் பிரபல ஹீரோவான விஷ்ணுவர்தனுடன் "ஹாலுண்ட டவரரு" படம் மூலம் பெரும் வெற்றியை பெற்றார்.

பிளாஸ்டிக் சர்ஜரியா? முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வால்

பிளாஸ்டிக் சர்ஜரியா? முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வந்த சித்தாரா நாயகியாக வாய்ப்பு குறைந்த நிலையில், துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

திருமணம்

37 வருட சினிமா பயணத்தில் 100'க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சித்தாரா, 1998 முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் தமிழ், கன்னடம், மலையாளம் என நடித்து வரும் சித்தாராவின் வயது கிட்டத்தட்ட 50'ஐ நெருங்கி விட்டது. இருப்பினும் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

actress sithara why havent marriead still heroine

இது குறித்து அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, தனது தந்தை பரமேஸ்வரன் நாயர் என்பவருடன் மிகவும் பாசத்துடன் இருந்த சித்தாரா, தந்தையின் மறைவிற்கு பிரிவு பிறகு திருமணம் செய்து கொள்ள ஆர்வம் வராத காரணத்தால், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.