கவுண்டமணி நிஜத்தில் வேற; செந்திலே சமமா உட்கார மாட்டாரு - போட்டுடைத்த ஷர்மிலி

Tamil Cinema Goundamani Actors Tamil Actors Tamil Actress
By Jiyath May 28, 2024 11:34 AM GMT
Report

நடிகர் கவுண்டமணியை குறித்து நடிகை ஷர்மிலி பேசியுள்ளார். 

நடிகை ஷர்மிலி

ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிலி. இவர் நடிகர் கவுண்டமணியுடன் இனைந்து 27 படங்களில் நடித்துள்ளார். அதேபோல் வடிவேலு, விவேக், வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்.

கவுண்டமணி நிஜத்தில் வேற; செந்திலே சமமா உட்கார மாட்டாரு - போட்டுடைத்த ஷர்மிலி | Actress Sharmilli About Actor Goundamani

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷர்மிலி நடிகர்கள் கவுண்டமணி - செந்தில் இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் "கவுண்டமணி சார் அவரோட சீன் நடிச்சிட்டு முடிச்சிட்டு போயிருவாரு. ஸ்க்ரீனுக்கு பின்னாடி பார்த்தீங்கன்னா நம்ம உக்காந்துட்டு இருந்தா கூட அவ்வளவா பேசமாட்டாரு.

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!

பயப்படுவோம்

அவர் தனியாவே உக்காந்திருப்பாரு. அவர் படத்தில் தான் காமெடி.. தனிப்பட்ட முறையில் ரொம்ப இறுக்கமான மனிதர். அவர்கிட்ட எந்த விஷயத்தையும் நம்ம பேசவே முடியாது . நாங்கல்லாம் பயப்படுவோம்.

கவுண்டமணி நிஜத்தில் வேற; செந்திலே சமமா உட்கார மாட்டாரு - போட்டுடைத்த ஷர்மிலி | Actress Sharmilli About Actor Goundamani

நடிகர் செந்தில் அவர் கூட 100 படத்துக்கும் மேல நடிச்சிட்டாரு. ஆனால் அவரும் கவுண்டமணிக்கு பயங்கரமா பயப்படுவாரு. அவர் முன்னாடி கூட உக்காந்தது கிடையாது இதுவரைக்கும்.

கவுண்டமணி சார் இங்க உக்காந்தா, செந்தில் பின்னாடி சேர் போட்டு உக்காருவாரு. அவருக்கு சமமா எல்லாம் செந்தில் சார் உக்காந்ததே கிடையாது. அந்த அளவுக்கு பயப்படுவாரு. அது பயம்னு சொல்றதவிட ஒரு மரியாதை தான்" என்று தெரிவித்துள்ளார்.