பார்த்திபன் சொன்னது கண்டிப்பா பொய்; நினைத்த மாதிரி இல்லை - போட்டுடைத்த நடிகை சீதா!

Parthiban Seetha
By Sumathi Dec 07, 2023 02:30 PM GMT
Report

பார்த்திபன் பேச்சுக்கு நடிகை சீதா விளக்கம் கொடுத்துள்ளார்.

பார்த்திபன் பேச்சு

நடிகை சீதா பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

seetha about parthiban

அதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு 2010ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 2016ல் விவாகரத்தில் முடிந்தது.

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

சீதா மறுப்பு

இந்நிலையில், பார்த்திபன் சில மேடைகளில் பேசுகையில், சீதாவின் காதலை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இருந்ததாக பேசியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சீதா பேட்டி ஒன்றில், பார்த்திபன் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை சீதா உடன் போனில் பேசும்போது அந்த மூன்று வார்த்தையை கூறுமாறு அடிக்கடி சொல்லுவார்.

பார்த்திபன் சொன்னது கண்டிப்பா பொய்; நினைத்த மாதிரி இல்லை - போட்டுடைத்த நடிகை சீதா! | Actress Seetha About Parthiban And Love

அதனை சொல்லவே 10 நாட்கள் எடுத்துக்கொண்டேன். இருவருக்கும் இடையே இருந்த காதல் உண்மை. பார்த்திபன் மேடைகளில் சீதாவின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன் என்று சொன்னது கண்டிப்பாக பொய். தான் நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை இல்லை.

திருமணத்திற்கு பிறகு நாம் எப்படி எல்லாமோ இருக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அது எல்லாமே நடக்கவில்லை என்ற போது தான் எனக்கு அந்த திருமண வாழ்க்கையில் விரத்தியே ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.