அப்படி பட்டவனுடன் வாழ்க்கையா.. இருந்தாலும் ஓகே சொன்னேன் - மனம் திறந்த சீதா!

Parthiban Tamil Cinema Seetha
By Sumathi May 01, 2023 02:30 PM GMT
Report

தனது நடிப்பு அனுபவம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை நடிகை சீதா பகிர்ந்துள்ளார்.

நடிகை சீதா

நடிகை சீதா பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு 2010ல் திருமணம் செய்து கொண்டனர்.

அப்படி பட்டவனுடன் வாழ்க்கையா.. இருந்தாலும் ஓகே சொன்னேன் - மனம் திறந்த சீதா! | Actress Seetha Says About Her Cinema Life

இந்த திருமணமும் 2016ல் விவாகரத்தில் முடிந்தது. தற்போது, சீதா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படித்து கொண்டிருந்த போது தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் வந்த பிறகு படிக்கெல்லாம் போகலை. ஏன் தெரியுமா? ஷூட்டிங் போனால் பிரியாணி, ஐஸ்கிரீம் தருவாங்க. வளையல் போட ஒரு ஆள்,

சினிமா அனுபவம்

செருப்பு மாட்ட ஒரு ஆள், தலை சீவுவதற்கு ஒரு ஆள், மேக்கப் போட ஒரு ஆள் என இருப்பாங்க. இதெல்லாம் அப்போ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால படிக்க போகலை. குரு சிஷ்யனில் கிளாமர் ரோல் செய்தேன். பாலசந்தர் சார் போன் செய்து என்ன சீதா பண்ணிட்டு இருக்க? ஏன் இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் நடிக்கீறனு திட்டுனாரு. விசு சாரும் அதேதான் சொன்னாரு.

அப்படி பட்டவனுடன் வாழ்க்கையா.. இருந்தாலும் ஓகே சொன்னேன் - மனம் திறந்த சீதா! | Actress Seetha Says About Her Cinema Life

உடனே என் அப்பாவிடம் போய் அழுதேன். அது முதல் மாடர்ன் ஆடைகள் அணிந்து நடிக்கவில்லை. பார்த்திபன் புதுமுகமாக புதிய பாதை படத்தை இயக்க வந்தார். அப்போது நான் அதில் நடிக்க ஏன் சம்மதித்தேன் என்றார். அந்த படத்தின் கதை அப்படி! அதில் ஒருவர் பலாத்காரம் செய்துவிடுவான், அவனோடு அந்த பெண் வாழும் கதை என்பதால்தான். இது புதிய விஷயமாக இருந்தது.

நல்லா இருக்கும் என்பதால் நான் இதில் நடித்தேன். ரசிகர்களும் என்னை பாராட்டினார்கள். அதன் பிறகு நிறைய படங்கள் எனக்கு கிடைத்தன. காதல், கல்யாணம் என கமிட்மென்ட் இருந்ததால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் போனது எனத் தெரிவித்துள்ளார்.