அவரை பார்க்கும் போது மனம் உடைந்தது - நடிகை ரித்திகா சிங் வேதனை

Ritika Singh Wrestling
By Sumathi Dec 23, 2023 10:30 AM GMT
Report

மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக் குறித்து ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

 ரித்திகா சிங்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்ய கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.

actress-ritika-sing

அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி நிலையில், தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டு இருந்தனர்.

பத்மஸ்ரீ விருது எதற்கு; பிரதமர் வீட்டருகே விட்டுச்சென்ற பஜ்ரங் புனியா - மோடிக்கு கடிதம்!

பத்மஸ்ரீ விருது எதற்கு; பிரதமர் வீட்டருகே விட்டுச்சென்ற பஜ்ரங் புனியா - மோடிக்கு கடிதம்!

சாக்‌ஷி மாலிக் ஓய்வு

ஆனால், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சஞ்செய் சிங் தலைவராக தேர்வாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சாக்‌ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

sakshi-malik-retirement

பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரரும் நடிகையுமான ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,

“சாக்‌ஷி மாலிக்கைப் போன்ற ஒரு அடையாளமிக்க நபர், இப்படி முடிவெடுத்ததை பார்க்கும் பொழுது மனம் உடைந்தது. இந்தியாவில் பலரை பெருமைப்படுத்திய ஒரு ஒலிம்பிக் வீரர், தனது நம்பிக்கைகளையும் கனவுகளையும் கைவிட்டு, பல வருட கடின உழைப்பையும் கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ என சொல்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலில் போராட்டத்தின் போது அவர் பட்ட அவமரியாதை. அதை தொடர்ந்து இது” என வேதனை தெரிவித்துள்ளார்.