ரஜினியோட அந்த விஷயம் நடக்கல; வருத்தம் தான் - நடிகை ரேகா பளீச்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை ரேகா சினிமா அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை ரேகா
80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேகா. சத்யராஜூடன் இணைந்து கடலோர கவிதைகள் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தொடர்ந்து, புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, நினைவே ஒரு சங்கீதம், புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்தினார்.
பட வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மிரியம்மா படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக களமிறங்கினார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கமல் சாருடன் நடித்தது போல ரஜினி சாருடன் ஜோடியாக நடிக்கவில்லை என்ற வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு.
ஏனெனில், அதற்கான தகுதி நம்மிடம் இல்லாமல் இல்லை. ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, ரஜினி சாருடன் ஜோடியாக நடிக்கக் கேட்டார்கள்.
ஆனால், அப்போது என்னிடம் டேட் இல்லை. அதனால், அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. கமல் சாரிடம் மைக்கேல் மதன காமராசன் போன்ற ஒரு காமெடி படம் மீண்டும் எடுங்கள், எனக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.