மாசம் ரூ2.5 லட்சம் ஜீவனாம்சம் - இதற்காகவே விவாகரத்துக்குப் பின் சேர்ந்த ரம்பா!

Rambha
By Sumathi Sep 04, 2023 07:50 AM GMT
Report

ரம்பாவின் கல்யாணமும், பிரிவும் குறித்த தகவல் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரஜினி, அஜித், விஜய், அர்ஜூன், சூர்யா முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மாசம் ரூ2.5 லட்சம் ஜீவனாம்சம் - இதற்காகவே விவாகரத்துக்குப் பின் சேர்ந்த ரம்பா! | Actress Rambha Marriage And Divorce

இதனையடுத்து, 2019ம் ஆண்டு தொழிலதிபர் இந்திர குமார் பத்மநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிய முடிவெடுத்த ரம்பா, விவாகரத்து கோரியிருந்தார்.

விவாகரத்து?

அந்த வழக்கில், என்னுடைய கணவருக்கு தொழிற்சாலை உள்ளது. மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். என் மூத்த மகளின் கல்வி, இளைய மகளின் மருத்துவ செலவுகளுக்கும், பராமரிப்புக்கும் பணம் தேவை.

மாசம் ரூ2.5 லட்சம் ஜீவனாம்சம் - இதற்காகவே விவாகரத்துக்குப் பின் சேர்ந்த ரம்பா! | Actress Rambha Marriage And Divorce

எனக்கும் சினிமா வாய்ப்பு இல்லை, எனவே எங்களின் பாராமரிப்புக்கு மாதம் ரூ.2.5 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றுக் கேட்டார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, அப்போது, இருவரும் சமரசம் செய்யுமாறு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

அதை ஏற்றுக் கொண்ட இருவரும், அதன் பின் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன் பின் கணவருடன் இணைந்த ரம்பாவிற்கு, மூன்றாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.