அப்போ அப்படிதான் இருந்தேன்; கல்யாணம் முடிஞ்சு கூட கேட்டாங்க.. நடிகை ரம்பா வெளிப்படை!

Rambha Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath Nov 01, 2023 03:30 PM GMT
Report

நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ரம்பா

உழவன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சாரக் கண்ணா, சுக்ரன் உள்ள பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

அப்போ அப்படிதான் இருந்தேன்; கல்யாணம் முடிஞ்சு கூட கேட்டாங்க.. நடிகை ரம்பா வெளிப்படை! | Actress Ramba Said She Will Act In Cinema Again

ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, அஜித், விஜய், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் ரம்பா கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்தார். அதற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக ரம்பா தெரிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாருக்கும் நான் வேணும்; ஆனா விஜய்யுடன் மட்டும் தான்.. நடிகை மீனா ஓபன் டாக்!

எல்லாருக்கும் நான் வேணும்; ஆனா விஜய்யுடன் மட்டும் தான்.. நடிகை மீனா ஓபன் டாக்!

பேட்டி

இதுகுறித்து ரம்பா கூறுகையில் "சினிமாவில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன்.

அப்போ அப்படிதான் இருந்தேன்; கல்யாணம் முடிஞ்சு கூட கேட்டாங்க.. நடிகை ரம்பா வெளிப்படை! | Actress Ramba Said She Will Act In Cinema Again

திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

சினிமாவை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினொமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில், நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்று ரம்பா பேசியுள்ளார்..