இதனால் தான் பெரிய நடிகர்கள் என் கூட நடிப்பதில்லை - பிரியாமணி பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

Priyamani Tamil Cinema
By Sumathi Apr 13, 2024 05:30 PM GMT
Report

பெரிய ஹீரோக்களுடன் நடிக்காததற்கான காரணம் குறித்து பிரியாமணி பேசியுள்ளார்.

நடிகை பிரியாமணி

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை பிரியாமணி.

priyamani

தமிழில் பருத்தி வீரன் திரைப்படம் மூலம் ஸ்டார் நடிகை அந்தஸ்தைப் பெற்றார். தேசிய விருது கிடைத்த அந்தப் படத்துக்குப் பிறகு பிரியா மணிக்கு படங்கள் வரிசையாக வந்தது.

2017ல் முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதன்பின், சில ஆண்டுகள் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

முத்தம் கொடுக்கமாட்டேன்; அவருக்கு யார் பதில் சொல்றது - பிரியாமணி ஆதங்கம்!

முத்தம் கொடுக்கமாட்டேன்; அவருக்கு யார் பதில் சொல்றது - பிரியாமணி ஆதங்கம்!

ஏன் நடிப்பதில்லை?

தற்போது, ஜவான் படத்தை தொடர்ந்து, அஜய் தேவ்கன் நடித்த மைதான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியாமணி, பெரிய ஹீரோக்கள் என்னை பார்த்து பயப்படுகிறார்கள்.

இதனால் தான் பெரிய நடிகர்கள் என் கூட நடிப்பதில்லை - பிரியாமணி பேச்சால் கடுப்பான ரசிகர்கள்! | Actress Priyamani About Doesnt Act With Mass Heros

நடிப்பில் நான் அவர்களை தூக்கி சாப்பிட்டுவிடுவேன் என்பதால், பெரிய நடிகர்களின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வரவில்லை எனப் பேசியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.