ஐஆர்எஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பு; பிரிந்த கணவர் - தமிழ் நடிகை முற்றுப்புள்ளி!
தனது குடும்பத்தை பிரிந்ததாக பரவிய வதந்திக்கு நடிகை நவ்யா நாயர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நவ்யா நாயர்
மலையாளத்தில் வெளியான திலீப்பின் இஷ்டம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். தமிழில் பிரசன்னாவுடன் அழகிய தீயே, சேரனுடன் ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, ரசிக்கும் சீமானே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
தொடர்ந்து விசாரணையில், அதிகாரி சச்சின் சாவந்த் நடிகை நவ்யா நாயருடன் நெருங்கி பழகியதும், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்தநவ்யா நாயர்,
“சச்சின் தனது பிறந்தநாளின் போது என் குழந்தைகளுக்குத் தங்க நகைகளைப் பரிசளித்தார். அவர் குருவாயூர் கோயிலுக்குச் செல்ல நான் ஏற்பாடு செய்தேன். அவர்நண்பர் மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சினை காரணமாக நடிகை நவ்யா நாயர், தனது கணவர் சந்தோஷ் மேனனை பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. அதனையடுத்து தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.