விஜய் ஒரு புத்திசாலி.. கச்சத்தீவு விவகாரத்தில் இதை செய்வார் - நடிகை நமீதா!

Jiyath
in பிரபலங்கள்Report this article
கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கையை மேற்கொள்வார் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
நடிகை நமீதா
நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியில் நடிகை நமீதா வாக்கு சேகரித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் "திமுக 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார்.
தோல்வி உறுதி
திமுக மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்" என்று தெரிவித்துள்ளார்.