அம்மா தான் அதற்கு காரணமே.. செஞ்சுருக்கலாம்னு தோணும் - நடிகை மீனா!

Meena Tamil Cinema
By Sumathi Mar 27, 2024 05:30 PM GMT
Report

தவறவிட்ட படம் குறித்து நடிகை மீனா மனம் வருந்தியுள்ளார்.

நடிகை மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

actress meena

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.

அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார்.

நீச்சல் உடையில் மீனா; வாய் பிளக்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!

நீச்சல் உடையில் மீனா; வாய் பிளக்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!

நீலாம்பரி கேரக்டர்

இந்நிலையில், சினி உலகம் யூடியூப் சேனலிற்கு முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில், அம்மா சொல்வது எப்போதும் சரியாக இருக்கும். ஆனால் ஒரு முறை தவறாக போய்விட்டது என்று நினைக்கிறேன். படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்கிறீர்களா? என்று என்னிடம் முதலில் கேட்டார்கள்.

அம்மா தான் அதற்கு காரணமே.. செஞ்சுருக்கலாம்னு தோணும் - நடிகை மீனா! | Actress Meena About Mother And Padayyapa Film

அம்மா தான் அதற்கு சம்மதிக்கவில்லை. காரணம் ரஜினியோடு பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நெகட்டிவ் கேரக்டர் ஒத்து வராது. அப்படி நடித்தாலும் அது ரசிகர்களின் மத்தியில் உன் இமேஜை டேமேஜ் செய்யும் என்று அம்மா கூறினார்.எனவே தான் அதில் நடிக்க நான் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால் அந்த கேரக்டரை ரம்யா கிருஷ்ணன் செய்து மிகச்சிறந்த பெயரை பெற்று விட்டார். எனக்கு ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரை செய்வது பற்றி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு நடிகை என்ற விதத்தில் வித்தியாசமான கேரக்டர்களை செய்து இருக்க வேண்டும்.

அத்தோடு சவால் நிறைந்த கேரக்டரை நழுவ விட்டு விட்டேன். இதனை எண்ணி பல முறை நான் கவலைப்பட்டு உள்ளேன். அம்மா சொன்னதை கேட்காமல் இந்த படத்தில் நடித்திருக்கலாமோ? என்று கூட சில சமயம் நான் நினைத்ததுண்டு என வருத்தம் தெரிவித்துள்ளார்.