அந்த இசை பிரபலம் அத்துமீறினார்; தவறான இடத்தில் தொட்டு.. நடிகை கல்யாணி குமுறல்!

Indian Actress Tamil TV Serials Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 09, 2024 12:00 PM GMT
Report

தன்னிடம் அத்துமீறிய நபர் குறித்து நடிகை கல்யாணி பேசியுள்ளார். 

நடிகை கல்யாணி

தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் நடித்து பிரபலமானவர் நடிகை கல்யாணி. இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அந்த இசை பிரபலம் அத்துமீறினார்; தவறான இடத்தில் தொட்டு.. நடிகை கல்யாணி குமுறல்! | Actress Kalyani About The Person Who Molested Her

மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் பணிபுரிந்துள்ளார். நடிகை கல்யாணி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார். இந்நிலையில் தன்னிடம் அத்துமீறிய நபர் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

கல்யாணி கூறியதாவது "இப்போ அந்த நபர் பிரபலமான ஒருவர். அந்த காலகட்டத்துல பிரபலமான ஒரு இசைக்கலைஞர். எனக்கு ஒரு 8 வயசு இருக்கும்போது, 7, 8 மாசமா அவர் அத்துமீறினாரு .

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

தப்பா தொடுவாரு

அதை எங்க அம்மாகிட்ட சொல்லவும் முடியல. ஏனா.. இப்போ இருக்குற 8 வயசு குழந்தைகள் வேற. அவங்களுக்கு எல்லாமே தெரியுது. நான் 8 வயசா இருக்கும்போது எதுவுமே புரியாம, அறியாம இருந்த காலகட்டம்.

அந்த இசை பிரபலம் அத்துமீறினார்; தவறான இடத்தில் தொட்டு.. நடிகை கல்யாணி குமுறல்! | Actress Kalyani About The Person Who Molested Her

நான் தூங்கிட்டு இருக்கும்போது அந்த நபர் வந்து தொடக்கூடாத தவறான இடங்களில் தொடுவாரு. எங்க அம்மா முன்னாடி அந்த நபர், செல்லக்குட்டி உனக்கு சாக்லேட் வேணுமா.. அப்படி இப்படினு ரொம்ப நல்ல விதமா பேசுவாரு. எங்க அம்மாவே அந்த நபரை தம்பி மாதிரி பாத்துட்டு இருந்தாங்க.

அதனால் எப்படி எங்க அம்மா கிட்ட சொல்லவேன், அதை எப்படி அவங்க ஏத்துப்பாங்கனு எனக்கு அப்போ தெரியல. எங்க அம்மா இறக்கும்வரை இந்த விஷயத்தை நான் சொல்லல. ஆனால், இன்னைக்கு வரைக்கும் அந்த நபரை டிவி-யில் பார்க்கும்போது மறுபடியும் அந்த 8 வயசு கல்யாணியா நான் மாறிடுவேன்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.