மும்பைக்கு போனதுக்கு காரணமே இதுதான் - முதல்முறை உண்மை உடைத்த ஜோதிகா

Sumathi
in பிரபலங்கள்Report this article
மும்பையில் செட்டிலானதன் காரணம் குறித்து நடிகை ஜோதிகா பேசியுள்ளார்.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா 2015ல் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து சிறந்த கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மும்பை செட்டில்
இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்கக் கூடாது என மாமா சிவகுமார் உங்களை தடுத்தாரா என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அந்த வீட்டில் தனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே என் அப்பா சிவகுமார் தான். கோவிட் நேரத்தில் என் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அடிக்கடி மும்பைக்கு விமானத்தின் மூலம் பறக்கவும் முடியவில்லை. சூர்யாவிடம் சொன்னதும் அவரும் ஓகே சொல்லி விட்டு மும்பையில் குடியேற சம்மதித்தார்.
அதற்காக வீட்டில் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை. பண்டிகை நாட்கள் என்றால் ஒன்றாக கூடி சந்தோஷமாக கொண்டாடி வருகிறோம். இது தற்காலிகமானது தான். மீண்டும் சென்னைக்கு வந்து விடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.