அந்த மாதிரியான காட்சிகள்; நடிக்கையில் இப்படித்தான் இருக்கும் -அஞ்சலி பளீச்!

Anjali Tamil Cinema
By Sumathi Jul 25, 2024 09:30 AM GMT
Report

நெருக்கமான காட்சிகள் குறித்து நடிகை அஞ்சலி பேசியுள்ளார்.

நடிகை அஞ்சலி

 தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை அஞ்சலி. அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

actress anjali

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!


நெருக்கமான காட்சி

இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியாகி வரவேற்பை பெற்றது.

அந்த மாதிரியான காட்சிகள்; நடிக்கையில் இப்படித்தான் இருக்கும் -அஞ்சலி பளீச்! | Actress Anjali About Intimate Scenes In Movie

இந்நிலையில், அஞ்சலி அளித்துள்ள பேட்டி ஒன்றில், "படங்களிலோ, வெப் சீரிஸ்களிலோ நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எப்போதும் சிரமமான ஒன்றாகத்தான் இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேர் மத்தியில் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது சிரமம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது பஹிஷ்கரனா என்ற வெப் சீரிஸிலும் நடித்துவருகிறார். அதில் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.