Monday, Jun 2, 2025

அதனால்.. மனதளவிலும், உடலளவிலும் ரொம்ப கஷ்டம் - அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்!

Aishwarya Rai Tamil Cinema
By Sumathi a year ago
Report

மணிரத்னம் படப்பிடிப்பு குறித்து ஐஸ்வர்யா ராய் அனுபவம் பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

aishwarya rai

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா அளித்த பேட்டி ஒன்றில்,

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

ராவனன் படப்பிடிப்பு

ராவனன் படத்தின் படப்பிடிப்பிற்கு காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காட்சி ஒன்றாக படமாக்கப்பட இருந்ததால், அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து படப்பிடிப்பு தளத்தை அடைந்தனர். காலையில் குளித்துவிட்டு செட்டுகளுக்குச் சென்றாலும், அவர் செய்ய வேண்டியது மட் ஷாட்கள் தான்.

ravanan film

சேறு நீண்ட நேரம் உடலில் இருக்கும். இந்தப் படத்தில் நடிப்பது சவாலான அனுபவமாக இருந்தது. மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய இந்தி மற்றும் தமிழ் திரைப்படமான ராவனன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.