கள்ளச்சாராய மரணங்கள் - சைலெண்டான சூர்யா!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Suriya Tamil nadu Kallakurichi
By Karthick Jun 20, 2024 08:13 AM GMT
Report

நடிகர் சூர்யா தற்போது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

மவுனமான சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக இருக்கும் சூர்யா, தெலுங்கு - மலையாள ரசிகர்களிடமும் கணிசமான வரவேற்பை பெற்றுள்ளார். அகரம் என்ற foundation மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கி வருகிறார்.

Actor suriya

தற்போது அவர் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்த படத்திலும் பிஸியாக இருக்கிறார். சினிமாவை தாண்டி தமிழக நலனிலும் அக்கறை கொண்டவராகவே இருந்தார் சூர்யா.

பாதிக்கப்பட்ட குழந்தைகள்...கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் - எடப்பாடியார் அறிவிப்பு!!

பாதிக்கப்பட்ட குழந்தைகள்...கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் - எடப்பாடியார் அறிவிப்பு!!

கடந்த ஆட்சி நடைபெற்ற போது பல்வேறு வகையிலான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வந்தார். ஆனால், தற்போது தமிழகத்தை உலுக்கியுள்ள கள்ளச்சாராய விவகாரத்தில் மவுனமாக இருக்கிறார்.

Suriya trolls in kallakurichi incident

அதனை குறிவைத்து நெட்டிசன்கள் சரமாரியான விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். ட்ரோல்ஸ், மீம்ஸ் என சமூகவலைத்தளத்தில் தற்போது வெளியாகி வரும் பலதும் சூர்யாவை குறிவைத்தே உள்ளது.

Suriya trolls in kallakurichi incident

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைந்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை 37 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.