’புறநானூறு’ படத்திலிருந்து விலகுகிறார் நடிகர் சூர்யா? கவலையில் ரசிகர்கள்!

Suriya Sudha Kongara
By Swetha Mar 26, 2024 10:51 AM GMT
Report

சுதா கொங்கரா- சூர்யா இணைந்திருக்கும் ‘புறநானூறு’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலக உள்ளதாக தெரியவந்துள்ளது.

புறநானூறு 

'சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு சூர்யா- சுதா கொங்கரா இணைந்துள்ள படம் புறநானூறு. இந்த படத்தின் மேல் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். எனினும், படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இது குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளிவரவில்லை.

’புறநானூறு’ படத்திலிருந்து விலகுகிறார் நடிகர் சூர்யா? கவலையில் ரசிகர்கள்! | Actor Suriya Hesitates About Purananooru Movie

இதனால், ரசிகர்கள் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என இணையத்தில் படக்குழுவினரை விடாமல் கேட்டு வருகின்றனர். அதற்கெல்லாம் பதில் வராததால், படத்தில் வேறு ஏதோ பிரச்சினை உள்ளது என்று அவர்களே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

அதற்கு கடந்த வாரத்தில் இயக்குநர் சுதா கொங்கரா ‘இந்தப் படம் ஸ்பெஷ‘இந்தப் படம் ஸ்பெஷலான கதை. அதனால், நாங்கள் எல்லோரும் இதை சிறப்பாகக் கொண்டு வர உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்துக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது’ என அந்த கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

சூர்யா குறித்து ரசிகை கேட்ட அந்த ஒரு வார்த்தை..ஜோதிகா என்ன சொன்னாங்க தெரியுமா?

சூர்யா குறித்து ரசிகை கேட்ட அந்த ஒரு வார்த்தை..ஜோதிகா என்ன சொன்னாங்க தெரியுமா?

படத்திலிருந்து விலகல்

இந்நிலையில், தற்போது சூர்யா இந்த படத்தில் இருந்து விலக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், ’புறநானூறு’ கதைப்படி இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சில விஷயங்களும், குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்த்துப் பேசும்படியான கதைக்களமாக அமைத்துள்ளாராம் சுதா கொங்கரா.

’புறநானூறு’ படத்திலிருந்து விலகுகிறார் நடிகர் சூர்யா? கவலையில் ரசிகர்கள்! | Actor Suriya Hesitates About Purananooru Movie

இதன் காரணமாக சூர்யா இந்தக் கதையில் நடிக்க யோசிப்பதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகிறது. ஆனால், வலுவான கதைக்களத்திற்காகவே படம் இத்தனை தாமதம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்தமாதிரியான சில காரணங்களால் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் தாமதமாகி வருகிறது. அதேபோல் ‘வணங்கான்’ படத்தில் இருந்தும் சூர்யா விலகிவிட்டார். மேலும், ‘புறநானூறு’ படமும் அப்படி ஆகிவிடக் கூடாது என்பது ரசிகர்களின் பெரிய கவலையாக உள்ளது.